வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' |
சமீபத்தில் 2023 - 2024ம் வருடத்திற்கான 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.. அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அட்லி இயக்கத்தில் இவர் நடித்த 'ஜவான்' திரைப்படம் மூலமாக இவருக்கு இந்த தேசிய விருது கிடைத்துள்ளது.
இந்த நிலையில் மலையாள திரையுலகிற்கு தேசிய விருது பெற்றுத்தந்த நடிகை ஊர்வசி, நடிகர் விஜயராகவன் ஆகியோருக்கு வாழ்த்து சொன்ன மோகன்லால், தேசிய விருது பெற்ற ஷாருக்கான் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கும் தனது வாழ்த்துகளை சோசியல் மீடியா பக்கம் மூலமாக தெரிவித்து இருந்தார். இதற்கு 'தேங்க்யூ மோகன்லால் சார் நன்றி' என்று சொன்ன ஷாருக்கான் 'ஒரு மாலை நேரத்தில் உங்களை சந்தித்து பேசி ஆரத்தழுவ முடியுமா' என அவரிடம் தன் விருப்பத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.