பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கன்னட திரை உலகில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் தர்ஷன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் கன்னட பத்திரிக்கையாளர் ஒருவரை தரக்குறைவாக பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பால் கன்னட மீடியாக்கள் இவர் மீது இரண்டு வருட தடை விதித்தன.
அதன்படி மீடியாக்களில் தர்ஷன் பற்றிய எந்த செய்திகளையும் வெளியிடாமல் மீடியாக்கள் புறக்கணித்தன. இந்த நிலையில் தற்போது முக்கியமான கன்னட மீடியாக்களின் எடிட்டர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தர்ஷன் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இருதரப்பிற்குமான சுமூகமான பேச்சுவார்த்தை ஏற்பாட்டை பிரபல கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முன்னின்று செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து பேசிய நடிகர் தர்ஷன், “இந்த வரலட்சுமி நோன்பு நாளில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது சந்தோஷம் அளிக்கிறது. நான் எனது செயலுக்கு எப்போதுமே வருத்தமோ மன்னிப்போ கேட்க தயங்கியது இல்லை. இப்போதும் கன்னட மீடியாக்களிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது திரையுலக வாழ்க்கை இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு அவர்களுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.