‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

கன்னட திரை உலகில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் தர்ஷன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் கன்னட பத்திரிக்கையாளர் ஒருவரை தரக்குறைவாக பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பால் கன்னட மீடியாக்கள் இவர் மீது இரண்டு வருட தடை விதித்தன.
அதன்படி மீடியாக்களில் தர்ஷன் பற்றிய எந்த செய்திகளையும் வெளியிடாமல் மீடியாக்கள் புறக்கணித்தன. இந்த நிலையில் தற்போது முக்கியமான கன்னட மீடியாக்களின் எடிட்டர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தர்ஷன் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இருதரப்பிற்குமான சுமூகமான பேச்சுவார்த்தை ஏற்பாட்டை பிரபல கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முன்னின்று செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து பேசிய நடிகர் தர்ஷன், “இந்த வரலட்சுமி நோன்பு நாளில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது சந்தோஷம் அளிக்கிறது. நான் எனது செயலுக்கு எப்போதுமே வருத்தமோ மன்னிப்போ கேட்க தயங்கியது இல்லை. இப்போதும் கன்னட மீடியாக்களிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது திரையுலக வாழ்க்கை இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு அவர்களுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.




