ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கன்னட திரை உலகில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் தர்ஷன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் கன்னட பத்திரிக்கையாளர் ஒருவரை தரக்குறைவாக பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பால் கன்னட மீடியாக்கள் இவர் மீது இரண்டு வருட தடை விதித்தன.
அதன்படி மீடியாக்களில் தர்ஷன் பற்றிய எந்த செய்திகளையும் வெளியிடாமல் மீடியாக்கள் புறக்கணித்தன. இந்த நிலையில் தற்போது முக்கியமான கன்னட மீடியாக்களின் எடிட்டர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தர்ஷன் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இருதரப்பிற்குமான சுமூகமான பேச்சுவார்த்தை ஏற்பாட்டை பிரபல கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முன்னின்று செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து பேசிய நடிகர் தர்ஷன், “இந்த வரலட்சுமி நோன்பு நாளில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது சந்தோஷம் அளிக்கிறது. நான் எனது செயலுக்கு எப்போதுமே வருத்தமோ மன்னிப்போ கேட்க தயங்கியது இல்லை. இப்போதும் கன்னட மீடியாக்களிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது திரையுலக வாழ்க்கை இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு அவர்களுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.