பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
உலக புகழ்பெற்ற 'டைம்' பத்திரிகையில் செய்தியாக, கட்டுரையாக இடம்பிடிப்பதே பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. இந்தியாவை பொறுத்ததவரை திரைப்படத்துறையில் இருந்து நடிகர் ஆமீர்கான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பர்வீன் பாபி ஆகியோர் இடம் பிடித்தனர். தற்போது இவர்கள் வரிசையில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இடம் பிடித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான 'பதான்' படத்தின் மூலம் அவர் உலகளாவிய புகழை பெற்றிருக்கிறார். இதுதவிர ஹாலிவுட் படங்களில் ஹீரோயினாக, வில்லியாகவும் நடித்திருக்கிறார், ஆஸ்கர் விருது விழாவின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். 2018ம் ஆண்டு டைம் பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் தீபிகா இடம் பெற்றிருந்தார். இப்படி பல வழிகளில் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ள தீபிகா டைம் பத்திரிகையின் அட்டை படத்தில் இடம்பெற்று புதிய கவுரவத்தை பெற்றிருக்கிறார்.
டைம் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் “உலகில் மனிதசக்தியை அதிகமாக கொண்ட நாட்டின் பிரதிநிதியாக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை சுற்றியும், எனக்கு எதிராவும் நிறைய அரசியல் நிகழ்வுகள் இருந்தது. அதைப் பற்றி பேச வேண்டுமா என்று தெரியவில்லை. பத்மாவத் படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு நான் எதிர்பாராதது. அது ஏன் என்று இதுவரை எனக்குத் தெரியவில்லை. ஒரு பாடலும், ஒரு ஆவணப்படமும் ஆஸ்கர் விருது வென்றது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இவற்றை ஒரு தொடக்கமாக பார்க்கிறேன். வருங்காலத்தில் இந்திய படங்கள் ஆஸ்கர் விருதுகளில் ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.