நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து தற்போது மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். சாகசங்கள் கலந்த திரில்லர் கதையில் உருவாகி வரும் இதில் இந்தியானா ஜோன்ஸ் பாணியில் வடிவமைக்கப்பட்ட ஒரு வேடத்தில் நடிக்கிறார் மகேஷ் பாபு.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது, படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அடிக்கடி விடுமுறை எடுக்கக் கூடாது என்று கூறி வந்த ராஜமவுலி, படப்பிடிப்பு தொடங்கிய சில வாரங்களிலேயே ஒரு பிரேக் கொடுத்தார். அதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தியவர், மீண்டும் தற்போது படக்குழுவுக்கு கோடை விடுமுறை கொடுத்திருக்கிறார்.
இந்த வாரம் இறுதியில் லண்டனில் நடைபெறும் ஆர்ஆர்ஆர் படம் தொடர்பான ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளப் போகிறார் ராஜமவுலி. அதனால் இந்த மாத இறுதியில் தான் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளாராம் . அந்த வகையில், புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய குறுகிய காலத்திலேயே இரண்டு முறை பிரேக் கொடுத்திருக்கிறார் ராஜமவுலி.