நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து தற்போது மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். சாகசங்கள் கலந்த திரில்லர் கதையில் உருவாகி வரும் இதில் இந்தியானா ஜோன்ஸ் பாணியில் வடிவமைக்கப்பட்ட ஒரு வேடத்தில் நடிக்கிறார் மகேஷ் பாபு.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது, படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அடிக்கடி விடுமுறை எடுக்கக் கூடாது என்று கூறி வந்த ராஜமவுலி, படப்பிடிப்பு தொடங்கிய சில வாரங்களிலேயே ஒரு பிரேக் கொடுத்தார். அதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தியவர், மீண்டும் தற்போது படக்குழுவுக்கு கோடை விடுமுறை கொடுத்திருக்கிறார்.
இந்த வாரம் இறுதியில் லண்டனில் நடைபெறும் ஆர்ஆர்ஆர் படம் தொடர்பான ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளப் போகிறார் ராஜமவுலி. அதனால் இந்த மாத இறுதியில் தான் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளாராம் . அந்த வகையில், புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய குறுகிய காலத்திலேயே இரண்டு முறை பிரேக் கொடுத்திருக்கிறார் ராஜமவுலி.