நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பரவலாக நடித்து வரும் சமந்தா, தற்போது தெலுங்கில் சுபம் என்ற ஒரு படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் மே 9ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படம் குறித்து சமந்தா கூறுகையில், ‛‛இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் தொலைக்காட்சி தொடர்களால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களை கருத்தில் கொண்டு சுபம் படத்தை திகில் மற்றும் நகைச்சுவை கலந்த கதையில் உருவாக்கி உள்ளோம். இந்த படத்தை ஒரு சமூக நையாண்டி என்று கூட சொல்லலாம்.
நான் ஒரு புத்திசாலியான தயாரிப்பாளராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த கதையின் மீது எனக்கு ஏற்பட்ட நம்பிக்கையால் இதை தயாரித்திருக்கிறேன். இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்றும் நம்புகிறேன். தயாரிப்பு சம்பந்தமாக யாரிடத்திலும் உதவி கேட்க விரும்பாமல் நானே அனைத்து செலவுகளையும் கவனித்துக் கொண்டேன். இந்த படத்திற்கு பிறகு ஜூன் மாதம் முதல் மா இண்டி பங்காரம் என்ற படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தையும் தயாரித்து நடிக்கப் போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா.