அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பரவலாக நடித்து வரும் சமந்தா, தற்போது தெலுங்கில் சுபம் என்ற ஒரு படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் மே 9ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படம் குறித்து சமந்தா கூறுகையில், ‛‛இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் தொலைக்காட்சி தொடர்களால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களை கருத்தில் கொண்டு சுபம் படத்தை திகில் மற்றும் நகைச்சுவை கலந்த கதையில் உருவாக்கி உள்ளோம். இந்த படத்தை ஒரு சமூக நையாண்டி என்று கூட சொல்லலாம்.
நான் ஒரு புத்திசாலியான தயாரிப்பாளராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த கதையின் மீது எனக்கு ஏற்பட்ட நம்பிக்கையால் இதை தயாரித்திருக்கிறேன். இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்றும் நம்புகிறேன். தயாரிப்பு சம்பந்தமாக யாரிடத்திலும் உதவி கேட்க விரும்பாமல் நானே அனைத்து செலவுகளையும் கவனித்துக் கொண்டேன். இந்த படத்திற்கு பிறகு ஜூன் மாதம் முதல் மா இண்டி பங்காரம் என்ற படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தையும் தயாரித்து நடிக்கப் போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா.