எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சமந்தா. இடையில் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் மீண்டு வந்து, தற்போது வெப் தொடர், படங்களில் நடித்து வருகிறார். தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ள சமந்தா, தொழில்முனைவோராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்ட சமந்தா, அவரது வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: ஒரு நடிகராக உங்களது காத்திருப்பு காலம் மிகக் குறைவு என நினைக்கிறேன். நட்சத்திர அந்தஸ்து, புகழ் மற்றும் அங்கீகாரங்கள் ஒரு மயக்கத்தை அளிக்கலாம், அது எல்லாமே நீங்கள்தான் என்றும் நினைக்கலாம். ஆனால் அது உண்மையில்லை.
ஒரு நட்சத்திரமாக இருக்கும்போது நிறைய நன்மைகள் கிடைக்கும். ஆனால் அது உங்கள் சொந்த முயற்சியால் வந்தது மட்டுமே அல்ல. வெள்ளிக்கிழமைகளில் வெளியாகும் எனது படங்களின் முடிவால், மகிழ்ச்சி சிதைக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது படங்களே வெளியாகாமல் இருந்தாலும், இதுவரை இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
100 பிரச்னைகள் இருப்பதாக பலரும் நினைக்கும் சூழலில், உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் வரும்போது, அது ஒன்று மட்டுமே நமக்குப் பிரச்னையாகத் தெரியும். எனது பிரச்னைகள் மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது முக்கியம் அல்ல, விளையாட்டைத் தொடர்வதுதான் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.