கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி என்கிற ரவி மோகன். அவர் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
திருமணமாகி 15 வருடங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் கடந்த வருடம் பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது. ஜனவரி மாதத்தில் தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என்று அழைப்பதிலிருந்து ரவி மோகன் என மாற்றிக் கொள்வதாக அறிவித்தார் ரவி.
ரவி, ஆர்த்தி இருவரும் பிரிந்த பின்பு ரவி, பாடகியும் ஹீலருமான கெனிஷா பிரான்சிஸ் என்பவரைக் காதலித்து வருவதாக கிசுகிசு பரவியது. தொடர்ந்து அவருடன் பயணிக்க உள்ளதாக அது குறித்து பத்திரிகையாளர்களிடமும் பேசியிருந்தார் ரவி. ஆனால், இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்ளாமல் இருந்தனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்லத் திருமணத்தில் ரவி, கெனிஷா இருவரும் ஒன்றாக வந்து இன்றைய சினிமா செய்திகளில் டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளார்கள். இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா, அல்லது லிவிங் டு கெதர் ஆக வாழ்ந்து வருகிறார்களா, அல்லது இனிமேல்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா என்ற கேள்விகளுக்கு எல்லாம் விரைவில் விடை தெரிய வரும்.