இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' | மூத்த நடனக் கலைஞர்களை கவுரவிக்கும் “டான்ஸ் டான்” விழா | மழையில் மூழ்கிய செட்டுகள் : இனி எப்போது ஷூட்டிங்? | “ரசிகர்களின் ரசனைமிகு வில்லன்” நடிகர் ரகுவரன். |
இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய பட விழாக்களில் மட்டுமல்ல, தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் விழாக்களிலும் கூட சர்ச்சையாக பேசி பார்வையாளர்களின் கவனத்தை திருப்புவதை ஒரு வாடிக்கையாகவே செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற டைனோசர்ஸ் என்கிற படத்தில் இசை வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டார் மிஷ்கின். இந்த படத்தை எம்.ஆர் மாதவன் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த நிகழ்வில் மிஷ்கின் பேசும்போது, “இயக்குனர் மாதவன் தன்னை இந்த விழாவிற்காக அழைக்க வந்தபோது அவரது முகத்தை பார்த்ததுமே அவர் அதிகமாக சிகரெட் பிடிப்பார் என்பது தெரிந்தது. என்னுடைய முதல் படத்தின் போது நான் தினசரி 100 சிகரெட் பிடித்தேன். அஞ்சாதே படம் எடுத்தபோது தினசரி 120 சிகரெட் பிடித்தேன். அந்த அளவுக்கு டென்ஷனை குறைக்க சிகரெட் உதவியது. ஒரு இயக்குனர் அதிகம் சிகரெட் பிடிக்கிறார் என்றாலே அந்த படம் ஹிட் தான். அந்த வகையில் இந்த படமும் நிச்சயம் ஹிட் ஆகும்” என்று பேசினார்.
அதுமட்டுமல்ல தனது பேச்சை முடிக்கும் சமயத்தில், 'மணி பத்து ஆகிவிட்டது எல்லோரும் வீட்டுக்கு போங்க.. தண்ணி அடிங்க.. தம் அடிங்க.. தூங்குங்க” என்றும் கூறினார்.
புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று கூறி ஒரு திரைப்படத்தின் துவக்கத்திலேயே விழிப்புணர்வு அறிவிப்புடன் தான் படத்தை துவங்குகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு பொறுப்பான இயக்குனரான மிஸ்கின் இதுபோன்று ஒரு தவறான முன்னுதாரணமான பேச்சை பொதுவெளியில் பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சோசியல் மீடியாவில் இது குறித்த விவாதங்களும் தற்போது அனல் பறக்கின்றன.