600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய பட விழாக்களில் மட்டுமல்ல, தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் விழாக்களிலும் கூட சர்ச்சையாக பேசி பார்வையாளர்களின் கவனத்தை திருப்புவதை ஒரு வாடிக்கையாகவே செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற டைனோசர்ஸ் என்கிற படத்தில் இசை வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டார் மிஷ்கின். இந்த படத்தை எம்.ஆர் மாதவன் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த நிகழ்வில் மிஷ்கின் பேசும்போது, “இயக்குனர் மாதவன் தன்னை இந்த விழாவிற்காக அழைக்க வந்தபோது அவரது முகத்தை பார்த்ததுமே அவர் அதிகமாக சிகரெட் பிடிப்பார் என்பது தெரிந்தது. என்னுடைய முதல் படத்தின் போது நான் தினசரி 100 சிகரெட் பிடித்தேன். அஞ்சாதே படம் எடுத்தபோது தினசரி 120 சிகரெட் பிடித்தேன். அந்த அளவுக்கு டென்ஷனை குறைக்க சிகரெட் உதவியது. ஒரு இயக்குனர் அதிகம் சிகரெட் பிடிக்கிறார் என்றாலே அந்த படம் ஹிட் தான். அந்த வகையில் இந்த படமும் நிச்சயம் ஹிட் ஆகும்” என்று பேசினார்.
அதுமட்டுமல்ல தனது பேச்சை முடிக்கும் சமயத்தில், 'மணி பத்து ஆகிவிட்டது எல்லோரும் வீட்டுக்கு போங்க.. தண்ணி அடிங்க.. தம் அடிங்க.. தூங்குங்க” என்றும் கூறினார்.
புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று கூறி ஒரு திரைப்படத்தின் துவக்கத்திலேயே விழிப்புணர்வு அறிவிப்புடன் தான் படத்தை துவங்குகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு பொறுப்பான இயக்குனரான மிஸ்கின் இதுபோன்று ஒரு தவறான முன்னுதாரணமான பேச்சை பொதுவெளியில் பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சோசியல் மீடியாவில் இது குறித்த விவாதங்களும் தற்போது அனல் பறக்கின்றன.