இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ஒருகாலத்தில் மிஷ்கினும், விஷாலும் நண்பர்களாக இருந்தார்கள். துப்பறிவாளன் படத்தில் விஷாலை ஸ்டைலாக நடிக்க வைத்து அழகு பார்த்தார் மிஷ்கின். ஆனால், துப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் மிஷ்கின், விஷால் இடையே பிரச்னை ஏற்பட்டது. மிஷ்கின் அதிக செலவு வைத்து விட்டார். சரியாக படப்பிடிப்பு நடத்தவில்லை என்று விஷால் தரப்பு குற்றம் சாட்டியது. விஷால் செய்த தவறுகளால் இவ்வளவு பிரச்னை என்று மிஷ்கின் தரப்பு பொங்கியது.
ஒரு மேடையில் விஷாலை கடுமையாக விமர்சனம் செய்தும் பேசினார் மிஷ்கின். பின்னர், துப்பறிவாளன் படத்தை தானே இயக்கப் போகிறேன் என்று விஷால் அறிவித்தார். சில பைனான்ஸ் பிரச்னை காரணமாக அந்த படம் அப்படியே நிற்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் 'விஷால், சாய் தன்ஷிகா திருமணம் குறித்து மிஷ்கின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விஷால் திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்றாலும், அவருக்காக ஒதுங்கி நின்று பிரார்த்தனை செய்வேன். சாய் தன்ஷிகா தனக்கு தெரிந்தவர் என்று கூறியுள்ளார்.
இதனால் மிஷ்கினை தனது திருமணத்துக்கு விஷால் அழைப்பாரா? இருவருக்கும் இடையில் சமாதானம் செய்து வைத்து துப்பறிவாளன் 2 படத்தை முடிக்க, சாய்தன்சிகா முயற்சிகள் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.