கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சென்னையில் நடந்த பிளாக்மெயில் பட நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர், வினியோகஸ்தரான தனஞ்செயன் ''சினிமா சுற்றி பல நெகட்டிவான விஷயங்கள் நடந்து வருகிறது. நல்ல படங்கள் வரும்போது அதை கெடுக்க வேண்டும் என பல விஷயங்கள் செய்கிறார்கள். அதை எல்லாம் தாண்டிதான் ஒரு படம் ஜெயிக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு பெரிய பட்ஜெட் படம் வந்தால் அது குறித்து திட்டமிட்டு பொய் செய்தி, நெகட்டிவ் தகவல் பரப்புகிறார்கள். அதை பார்த்துவிட்டு பலர் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வருவது இல்லை. என் உறவினர்கள் கூட இதை சொல்கிறார்கள்.
சினிமாவை மிஸ்யூஸ் செய்யாதீர்கள். நல்ல சினிமாவிற்கு எப்போதும் ஆதரவு கொடுங்கள். இது எனது தனிப்பட்ட கருத்துதான். இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷை நெருங்குவது கடினம். ஆனால், நடிகராக அவரை அணுகுவது எளிது. சம்பளமே வாங்காமல் கூட நடிப்பார். ஏனெனில், நடிப்பது அவருக்கு பிடிக்கும். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் ஜிவி பிரகாஷ்'' என்றார்.
நெகட்டிவ் ரிவியூ அதிகம் வரும் நேரத்தில் இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர் சங்கம், நடிகர் சங்கம், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டு கூட்டம் நடத்தி முக்கியமான அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட கூட்டத்தை கூட்டும் ஐடியா கூட யாருக்கும் வரவில்லை என்கிறார்கள் நெகட்டிவ் ரிவியூவால் பாதிக்கப்பட்டவர்கள்.