கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'பிளாக்மெயில்'. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் தேஜூ அஸ்வினி. ஆகஸ்ட் முதல் தேதியில் படம் வெளிவருகிறது. படத்தில் நடித்திருப்பது பற்றி தேஜூ அஸ்வினி கூறியிருப்பதாவது: 'படாக் படாக்' பாடலில் ஜிவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து நடனமாடினேன். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. நாங்கள் இருவரும் வைரல் ஜோடியானோம். எங்கள் ஜோடி பொருத்தம் குறித்து பலரும் பாராட்டினார்கள். அதுவே நான் இந்த படத்தில் இணைய காரணமானது. ஏற்கெனவே இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் எனக்கு தனி அடையாளத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்.
வழக்கமான நடிப்பைத் தாண்டி பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்க 'பிளாக்மெயில்' இடம் கொடுத்தது. புதுவிதமான அனுபவமாக இது அமைந்தது. இயக்குநர் மு. மாறனின் முந்தைய படங்களான 'கண்ணை நம்பாதே', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரம் இருக்கும். 'பிளாக்மெயில்' படத்தில் என்னை கதாநாயகியாக கேட்டபோதும் நிச்சயம் நடிப்பை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரமாக அமையும் என்ற நம்பிக்கையில் சம்மதித்தேன். ஜிவி பிரகாஷ் உடன் இதற்கு முன்பு கலர்புல்லான மியூசிக் வீடியோவில் பணிபுரிந்திருந்ததால் இந்த வாய்ப்பு அவர் மூலம் எனக்கு அமைந்தது'' என்றார்.