திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் |
சின்னத்திரை நடிகர்கள் திவ்யா ஸ்ரீதரும், அர்னவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்தபோது இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். தனியாக வசித்து வந்த திவ்யா ஸ்ரீதர் அண்மையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில், அர்னவ் அண்மையில் அளித்த பேட்டியில், 'என் குழந்தையை நேரில் சென்று பார்க்க பயமாக இருக்கிறது. அட்லீஸ்ட் வீடியோ காலில் காட்டினால் கூட சந்தோஷப்படுவேன். என் குழந்தையை பார்க்கவோ, வளர்க்கவோ வாய்ப்பு கிடைத்தால் என் குழந்தையை மட்டும் அழைத்துக் கொள்வேன். என் அம்மா, அப்பா பேச்சை மீறி திவ்யாவை திருமணம் செய்தேன். ஆனால், நான் என் பெற்றோர் பேச்சை கேட்டிருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.