கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா தொடரில் காமெடி ரோலில் நடித்திருந்தார் சந்திரன். தற்போது மலர் தொடரில் நடித்து வருகிறார். அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையால் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த சந்திரன் ரூ.35 லட்சத்தை இழந்துள்ளார். முதலில் வைஷ்ணவி தான் 25 ஆயிரம் ரூபாயை ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அதற்கு ஒழுங்காக பணம் வரவே கடன் வாங்கி ஒரு பெரிய தொகையை முதலீடு செய்துள்ளார். அவரைப்போலவே சந்திரனும் தனது வீட்டை அடமானம் வைத்து ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். ஆனால், அதற்கு அடுத்தமாதமே பணம் வருவது நின்றுவிட்டது. கடந்த செப்டம்பரில் தான் சந்திரனுக்கும் வைஷ்ணவிக்கும் திருமணம் நடந்தது. தற்போது இந்த பிரச்னையால் சொந்த வீட்டிலிருந்த சந்திரன் வாடகை வீட்டிற்கு வந்துவிட்டதாகவும், வாங்கிய கடனை கட்ட முடியாமல் அவதிப்படுவதாகவும் கூறியுள்ளார்.