கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

ராதிகா சரத்குமார் தயாரிப்பில் அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே கிழக்கு வாசல் தொடர் உருவாகி வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகர், ராதிகா, ரேஷ்மா, அஸ்வினி, சஞ்சீவ் வெங்கட், அருண்குமார் ராஜன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த சீரியலில் நடிக்க கமிட்டாகியிருந்தனர். நடிகர் சஞ்சீவ் வெங்க்ட தான் ஹீரோவாக நடிக்க இருந்தார். சீரியலுக்கான ஷூட்டிங்கும் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில், நடிகர் சஞ்சீவ் கிழக்கு வாசல் தொடரிலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், 'நான் கிழக்கு வாசல் தொடரிலிருந்து அதிகாரபூர்வமாக விலகிவிட்டேன் என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். கிழக்கு வாசல் தொடரில் முத்து கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. ராதிகா சரத்குமார் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரை மிஸ் செய்கிறேன். அடுத்த ப்ராஜெக்டில் உங்களை சந்திக்கிறேன் நன்றி' என்று அறிவித்திருந்தார். இதனால், சஞ்சீவின் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.