சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? |
சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர், நடிகர் அர்னவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனால், சில நாட்களிலேயே அர்னவ் புதிதாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக திவ்யா ஸ்ரீதர் போலீசில் புகாராளித்தார். தற்போது இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் கர்ப்பமாக இருந்த திவ்யா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் அர்னவ் தன்னை போலவே பல பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும், தவிர ஒரு ஆணை காதலிப்பதாக ஏமாற்றி அவரது தற்கொலைக்கும் காரணமாக இருந்ததாகவும் அண்மையில் பேட்டியில் கூறியிருந்தார். அதற்கான ஆதாரங்களையும் திவ்யா வெளியிட்டுள்ளார். திவ்யாவின் இந்த குற்றசாட்டுக்கு பதிலளித்துள்ள அர்னவ், 'முதல் கணவருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே திவ்யா என்னுடன் கள்ளத்தொடர்பில் இருந்து என்னை ஏமாற்றினார். மேலும், என்னுடைய கேரியரை காலி செய்வதற்காக சீரியல் நடிகர் ஈஸ்வருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அவருடனும் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அனைத்தையும் விரைவில் வெளியிடுவேன்' என்று பேட்டியளித்துள்ளார். மேலும், திவ்யா, அர்னவின் கேரியரை காலி செய்ய ஈஸ்வருடன் சேர்ந்து திட்டம் தீட்டுவது போல் வாட்ஸப் ஸ்கீரின்ஷாட்டையும் வெளியிட்டிருக்கிறார்.