அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஏன் அந்த இலாகா? நடிகர் விஷால் கேள்வி | பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? | நடிகையை பிளாக்மெயில் செய்த பாய் பிரண்ட் | பிளாஷ்பேக்: பாடல் பதிவிற்குப் பின் நடனக் காட்சியை படமாக்கும் முறையை அறிமுகப்படுத்திய “அசோக்குமார்” | இளம் பெண் அமைச்சரை வாழ்த்திய நடிகை ரேவதி | முன்னாள் முதல்வரை சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜ் | விஜய் முதல்வர் ஆனதால் பொறாமையா? அதிமுக-திமுக கூட்டணிக்கு முயன்றேனா? : ரஜினிகாந்த் விளக்கம் | 'கருப்பு' வெற்றி: ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் நன்றி சொன்ன சூர்யா |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில், முதன்மை கதாபாத்திரமான மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிகை அர்ச்சனா நடித்து வந்தார். சில தினங்களுக்கு முன் கதையின் போக்கு தனக்கு பிடிக்காத காரணத்தால் மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலிருந்து தான் விலகிக்கொள்வதாக அறிவித்தார். இதனையடுத்து யார் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால், மீனாட்சி தீ விபத்தில் இறந்துவிட்டது போல அவரது அஸ்தியை காண்பித்து அந்த கதாபாத்திரத்தை எண்ட் கார்டு போட்டு முடித்திருந்தனர். இதனால் மீனாட்சி கதாபாத்திரத்திற்கே எண்ட் கார்டா? என ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில், அர்ச்சனாவுக்கு மாற்றாக மற்றொரு நடிகையை கண்டுபிடித்துவிட்ட சீரியல் குழு மீனாட்சி கதாபாத்திரத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது. இனி வரும் எபிசோடுகளில் நடிகை ஸ்ரீ ரஞ்சனி தான் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் புதிய மீனாட்சியை ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.