ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

கடந்த சில வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகாதொடர் 'மகாநதி'. இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் இளம் நடிகை ஷாதிகா. இவர் 'நான் மகான் அல்ல, நெஞ்சில் துணிவிருந்தால்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது ஷாதிகா அளித்த பேட்டியில், மகாநதி தொடரில் நடித்தபோது இருந்த தயக்கம் குறித்து அவர் கூறியதாவது, "மகாநதி சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் கமிட் ஆகும் போது எனக்கு இது இவ்ளோ பெரிய நெகட்டிவ் கதாபாத்திரம் என தெரியாது. நான் சீரியலில் நடிக்கும் போது இந்த மாதிரி யாரும் என்னை மோசமாக திட்டியதில்லை. திடீரென்று அவ்வளவு வெறுப்பு பார்க்கவும் ரொம்ப பயந்துட்டேன். இது நமக்கு செட் ஆகுதா, இல்லையா என குழப்பமா இருந்தது. நான் ரொம்ப சென்சிடிவ் ஆன கேரக்டர். சமூக வலைதளங்களில் கமென்ட்களை படித்துவிட்டுச் இயக்குனர் பிரவீன் சார்கிட்ட சீரியலில் இருந்து விலகிக்கிறேன் என்றெல்லாம் கூறினேன். அவர், கமென்ட் எல்லாம் மனதில் வச்சுகாதீங்க விடுங்க என கூறி என்னை ஆறுதல் படுத்தினார்" எனக் கூறினார்.