தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராஜமவுலி, மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரியங்கா சோப்ராக கதாநாயகியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆரம்பமாகி ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இப்படத்திற்காக காசி நகரை செட் மூலம் ஐதராபாத்தில் உருவாக்கியுள்ளதாகத் தகவல் வெளியானது. ஐதராபாத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகி ஒடிசா மாநிலத்தில் நடந்து வருகிறது. அதற்கடுத்து காசி செட்டில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
இந்நிலையில் அந்த செட்டின் புகைப்படத்தை யாரோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. அனுமதி இல்லாமல் இம்மாதிரி புகைப்படங்களை வெளியிடுவதில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். அதையும் மீறி புகைப்படம் வெளியாகி உள்ளது.




