பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

17வது ஆண்டு எடிசன் திரைப்பட விருதுகள் ஏப்ரல் மாதம் மலேசியாவில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு பினாங்கு லைட் ஓட்டலில் நடந்தது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் சதீஷ், பினாங்கு மாநில அமைச்சர் டத்தோஸ்ரீ சுந்தர்ராஜு, ஆட்சி குழு உறுப்பினர் குமரன், பினாங்கு மாநில மேயர் டத்தோ ராஜேந்திரன், டத்தோ பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சதீஷ் பேசுகையில், ‛‛சினிமாவை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அவர் பெயரில் விருது வழங்க வேண்டும் என எண்ணம் தோன்றியது செல்வகுமாரையே சாரும். கடத்த 16 ஆண்டுகளாக பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், என சினிமா துறைக்கு தொடர்ந்து விருது வழங்கிய ஊக்குவித்து வருகிறார்'' என்றார்.

தொடர்ந்து இந்த விருது நிகழ்வில் போட்டியிடும் பல்வேறு படங்கள், திரைப்பிரபலங்களுக்கு ஓட்டளிக்கும் நிகழ்வும் ஆன்லைனில் துவங்கியது. சதீஷ் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஓட்டளித்தனர்.
ஏப்ரல் ஐந்தாம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஸ்பைஸ் அரேனா அரங்கில் எடிசன் திரை விருதுகள் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் முதன் முறையாக பினாங்கில் நடக்கவிருக்கும் எடிசன் பிலிம் பெஸ்டிவலில் அமரன், மகாராஜா, விடுதலை 2, மெய்யழகன், லப்பர் பந்து ஆகிய 5 படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் எடிசன் திரை விருது ரசிகர்களுக்கு தங்களுக்கு பிடித்தமான நடிகரின் படம் போட்ட டி-ஷர்டையும் (T-Shirt) விற்பனை செய்ய உள்ளதாக செல்வகுமார் தெரிவித்தார்.




