பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
சின்னத்திரை நடிகர்களான அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை பஞ்சாயத்து சென்றது. செல்லம்மா தொடரில் நடித்து வரும் அன்ஷிதா என்ற நடிகையுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அர்னவ் தன்னை கழட்டிவிட முயற்சிப்பதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் திவ்யா ஸ்ரீதர் புகார் கூறினார். அதேசமயம் திவ்யாவின் குற்றச்சாட்டுக்கு அன்ஷிதா எந்த மறுப்பும் அப்போது சொல்லவில்லை.
அதேசமயம் அர்னவ் அன்ஷிதாவுடன் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறார். இருவரும் அடிக்கடி ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் தற்போது இருவரும் வெளியிட்டுள்ள ஒரு ரீல்ஸ் வீடியோவில் 'என் சொந்தமெல்லாம் நீதான் என்பது போல்' அன்ஷிதா அர்னவை பிடித்து இழுத்து நெருக்கமாக நின்று போஸ் கொடுத்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும் ரசிகர்கள் திவ்யா ஸ்ரீதர் அர்னவ்-அன்ஷிதா பற்றி கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை தான் என அதிர்ந்து போயுள்ளனர்.