டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமந்தா நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் சாகுந்தலம். புராண காவியமான சாகுந்தலத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமந்தா. படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் இவர் சாதாரண வெள்ளை உடை அணிந்து காட்டில் உள்ள ஆசிரமத்தில் வாழும் பெண்ணாக நடித்திருந்தார். ஆனால் கிளைமாக்ஸில் இவர் மன்னனின் அரண்மனைக்கு செல்லும் காட்சியில் கிட்டத்தட்ட 30 கிலோ எடைகொண்ட லெகங்கா போன்ற உடை அணிந்து நடித்திருந்தார். அதை அணிந்துகொண்டு நடித்தபோது அதன் எடையால் தான் சற்றே சிரமப்பட்டதாகவும், எப்போது அந்த காட்சியை படமாக்கி முடிப்பார்கள் என நினைத்ததாகவும் கூட கூறியிருந்தார் சமந்தா.
அதேபோல அந்தப்படத்தில் அசுரர் குல தலைவனாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பாலிவு நடிகர் கபீர் துஹான் சிங். தமிழில் அஜித்தின் துணிவு, விஷாலின் ஆக்சன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக இவர் நடித்திருந்தார். இந்த சாகுந்தலம் படத்திற்காக சுமார் 15 கிலோ எடை கொண்ட ஆபரணங்களால் ஆன உடைகளை அணிந்து கொண்டு நடித்ததாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் கபீர் துஹான் சிங்.