தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் |
சமந்தா நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் சாகுந்தலம். புராண காவியமான சாகுந்தலத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமந்தா. படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் இவர் சாதாரண வெள்ளை உடை அணிந்து காட்டில் உள்ள ஆசிரமத்தில் வாழும் பெண்ணாக நடித்திருந்தார். ஆனால் கிளைமாக்ஸில் இவர் மன்னனின் அரண்மனைக்கு செல்லும் காட்சியில் கிட்டத்தட்ட 30 கிலோ எடைகொண்ட லெகங்கா போன்ற உடை அணிந்து நடித்திருந்தார். அதை அணிந்துகொண்டு நடித்தபோது அதன் எடையால் தான் சற்றே சிரமப்பட்டதாகவும், எப்போது அந்த காட்சியை படமாக்கி முடிப்பார்கள் என நினைத்ததாகவும் கூட கூறியிருந்தார் சமந்தா.
அதேபோல அந்தப்படத்தில் அசுரர் குல தலைவனாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பாலிவு நடிகர் கபீர் துஹான் சிங். தமிழில் அஜித்தின் துணிவு, விஷாலின் ஆக்சன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக இவர் நடித்திருந்தார். இந்த சாகுந்தலம் படத்திற்காக சுமார் 15 கிலோ எடை கொண்ட ஆபரணங்களால் ஆன உடைகளை அணிந்து கொண்டு நடித்ததாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் கபீர் துஹான் சிங்.