மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
நடிகை சமந்தா நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சகுந்தலம். இயக்குனர் குணசேகர் இயக்கிய இந்த படத்தில் நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம், நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று உலகளவில் ரூ.7 கோடி மட்டும் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் தில் ராஜூ இந்த படம் குறித்து வேதனையாக பேசியுள்ளார். அதன்படி, சகுந்தலம் படம் 3டி தொழில்நுட்பத்துடன் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. சுமார் ரூ.65 கோடி பட்ஜெட்டில் தயாரித்த இப்படம் ரூ.7 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே பிரபல ஓடிடி தளம் ஒன்றுக்கு ரூ.35 கோடிக்கு விற்கப்பட்டதால் நஷ்டம் ரூ. 22 கோடியாக குறைந்துள்ளது இல்லையெனில், பெருத்த நஷ்டத்தை சந்தித்து இருப்பேன் என்று கூறியுள்ளார். தனது 25 வருட சினிமா பயணத்தில் இது போன்ற ஒரு தோல்வியை சந்தித்தது இல்லை என்று மன வேதனையுடன் தெரிவித்துள்ளார் தில் ராஜூ.