இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
டாப்ஸிக்கும் பிரச்சினைகளுக்கும் பல ஜென்ம தொடர்பு இருக்கும் போலிருக்கிறது. அடிக்கடி சர்சையில் சிக்குவார். தொடர்ந்து கங்னா ரணவத்துடன் மோதிக் கொண்டிருப்பார். இந்த முறை அவர் இந்து கடவுளை அவமதித்து சிக்கலில் சிக்கி உள்ளார். சில தினங்களுக்கு முன்பு பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட டாப்ஸி கவர்ச்சியான உடை அணிந்து வந்தார். அவர் உடையை எப்படி வேண்டுமானாலும் அணிந்து கொள்ளட்டும், அரை குறை உடையுடன் கழுத்தில் பெண் கடவுள் லட்சுமி உருவம் பொறித்த நெக்லசையும் அணிந்திருந்தார்.
இது சர்ச்சையை கிளப்பியது. கவர்ச்சி உடையில் கடவுளின் உருவ நெக்லசை எப்படி அணியலாம் என்று வலைத்தளத்தில் பலர் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். இந்த நிலையில் டாப்ஸி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து ரக்சக் சங்கதன் அமைப்பை சேர்ந்த எக்லவியா சிங் கவுர் மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகார் மனுவில் “ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் டாப்ஸி கவர்ச்சியாக வந்து லட்சுமி தேவியின் உருவ நெக்லசை அணிந்து இந்து மத உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.