தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

பிரபாஸ், கிர்த்தி சனோன், சன்னி சிங், சைப் அலிகான் நடிக்கும் பான் இந்தியா படம் 'ஆதி புரூஷ்'. பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தப் படத்தை பூஷண் குமார் தயாரிக்கிறார். ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். வரும் ஜூன் மாதம் 16ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதை தொடர்ந்து இதன் புரமோஷன் பணிகளை நாளை முதல் தொடங்குகிறார்கள். இதை முன்னிட்டு தயாரிப்பாளர் பூஷண் குமார் இயக்குநர் ஓம் ராவத் ஆகியோர் ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவியை தரிசித்து பணிகளை தொடங்கி உள்ளனர். வைஷ்ணவி தேவி கோயிலில் நடந்து வரும் சைத்ர நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட இவர்கள் படத்தின் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு நடத்தினர்.
”வைஷ்ணவி தேவி எங்கள் குல தெய்வம். எந்த காரியத்தை தொடங்கினாலும் அவளை வணங்கி ஆசீர்வாதம் பெற்றே தொடங்குவோம். ஆதி புருஷ் படத்தின் பணிகளை அப்படியே தொடங்கி உள்ளோம். பெரும் வெற்றியை அவள் எங்களுக்கு தருவாள்” என்கிறார் தயாரிப்பாளர் பூஷண் குமார்.