வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நடிகை ஷாலினி தமிழ் சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக பேபி ஷாலினி என்கிற பெயரில் நடித்து பிரபலமானவர். பின்னர் மலையாளம், தமிழ் மொழி படங்களில் நாயகியாக நடித்து வந்தார். தமிழில் 'காதலுக்கு மரியாதை, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும்' ஆகிய 5 படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இதில் அஜித்துடன் 'அமர்க்களம்' படத்தில் இணைந்து நடித்த போது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை விட்டு ஒதுங்கினார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் ஷாலினி.
அந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “என்னுடைய குழந்தைகள் இருவருமே இதுநாள் வரை நான் நடித்த படங்களை பார்க்கவில்லை. பார்ப்பதற்கு ஆர்வமும் காட்டவில்லை. கேட்டால் இன்னொரு நாள் பார்த்துக் கொள்கிறோம் என்று பதில் சொல்வார்கள். சமீபத்தில் என் மகளின் தோழி என்னுடைய அலைபாயுதே படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னதை தொடர்ந்து என்னுடன் சேர்ந்து அந்த படத்தை பார்க்க போவதாக சொன்னார். ஆனால் இன்றுவரை பார்க்கவில்லை.” என்று கூறியுள்ளார்.




