திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

நடிகை ஷாலினி தமிழ் சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக பேபி ஷாலினி என்கிற பெயரில் நடித்து பிரபலமானவர். பின்னர் மலையாளம், தமிழ் மொழி படங்களில் நாயகியாக நடித்து வந்தார். தமிழில் 'காதலுக்கு மரியாதை, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும்' ஆகிய 5 படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இதில் அஜித்துடன் 'அமர்க்களம்' படத்தில் இணைந்து நடித்த போது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை விட்டு ஒதுங்கினார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் ஷாலினி.
அந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “என்னுடைய குழந்தைகள் இருவருமே இதுநாள் வரை நான் நடித்த படங்களை பார்க்கவில்லை. பார்ப்பதற்கு ஆர்வமும் காட்டவில்லை. கேட்டால் இன்னொரு நாள் பார்த்துக் கொள்கிறோம் என்று பதில் சொல்வார்கள். சமீபத்தில் என் மகளின் தோழி என்னுடைய அலைபாயுதே படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னதை தொடர்ந்து என்னுடன் சேர்ந்து அந்த படத்தை பார்க்க போவதாக சொன்னார். ஆனால் இன்றுவரை பார்க்கவில்லை.” என்று கூறியுள்ளார்.




