'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி |
தமிழ் சினிமாவில் ‛ஆடுகளம்' படம் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை டாப்ஸி. ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அதிகமாக ஹிந்தியில் நடித்து வருகிறார். அக் ஷய் குமார் உடன் கேல் கேல் மெயின் என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் ஆக., 15ல் படம் வெளியாகிறது.
இப்படம் புரமோஷன் தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : ‛‛நான் வேறு யாரையும் போல வாழ விரும்பவில்லை. என்னை போலவே வாழ விரும்புகிறேன். பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாற வேண்டும் என்றெல்லாம் ஒரு போதும் ஆசைப்பட்டது இல்லை. என் வாழ்க்கையில் நான் முதலிடத்தில் இருக்கிறேன். காரணம் இங்கு நான் உழைக்கிறேன், சம்பாதிக்கிறேன்'' என்றார்.