நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தமிழ் சினிமாவில் ‛ஆடுகளம்' படம் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை டாப்ஸி. ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அதிகமாக ஹிந்தியில் நடித்து வருகிறார். அக் ஷய் குமார் உடன் கேல் கேல் மெயின் என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் ஆக., 15ல் படம் வெளியாகிறது.
இப்படம் புரமோஷன் தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : ‛‛நான் வேறு யாரையும் போல வாழ விரும்பவில்லை. என்னை போலவே வாழ விரும்புகிறேன். பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாற வேண்டும் என்றெல்லாம் ஒரு போதும் ஆசைப்பட்டது இல்லை. என் வாழ்க்கையில் நான் முதலிடத்தில் இருக்கிறேன். காரணம் இங்கு நான் உழைக்கிறேன், சம்பாதிக்கிறேன்'' என்றார்.