என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை மற்றும் நிலச்சிரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் அங்கு நடந்து வருகின்றன. இந்நிலையில் மலையாள நடிகரும், ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலுமான மோகன்லால் வயநாடு, மேப்பாடி உள்ளிட்ட பகுதியில் ராணுவ சீருடையில் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.
அவர் கூறுகையில் ‛‛இந்தியா சந்தித்த பேரிழப்புகளில் இதுவும் ஒன்று. எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் மக்கள் இன்னும் சிக்கி இருக்கிறார்களா என தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் நன்றி. இழந்ததை திரும்ப பெற முடியாது. ஆனால் இந்த மக்களின் எதிர்காலத்திற்கு உதவலாம்'' என்றவர் தனது விஸ்வசாந்தி அறக்கட்டளை மூலம் ரூ.3 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.