ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை டாப்ஸி. அதைத் தொடர்ந்து ஆரம்பம், கேம் ஓவர், அனபெல் சேதுபதி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் ஹிந்தியில் பெரும்பாலும் கதாநாயகியை மையப்படுத்திய படங்களிலேயே ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.
குறிப்பாக விளையாட்டு வீராங்கனைகளின் பயோபிக்குகளில் நடிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான் தொகுத்து வழங்கும் தவான் கரேங்கே என்கிற டாக் ஷோவில் கலந்து கொண்ட டாப்ஸி தனக்கு முதல் பாலிவுட் வாய்ப்பு எப்படி கிடைத்தது என ஒரு புதிய ஆச்சரிய தகவலை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “பாலிவுட்டிற்குள் நான் அழைத்து வரப்பட்டதே நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் சாயலில் நான் இருக்கிறேன் என்கிற காரணத்தால் தான். ப்ரீத்தி ஜிந்தா எப்படிப்பட்ட அழகும் திறமையும் கொண்டவர். எவ்வளவு சுறுசுறுப்பானவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் நான் அறிமுகமான காலகட்டத்தில் அவரைப் போல இருப்பதற்கு முயற்சி செய்து வந்தேன்” என்று கூறியுள்ளார்.
2013ல் வெளியான சாஸ்மே பதூர் படத்தின் மூலம் பாலிவுட்டில் டாப்ஸி அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.