மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல், தீபிகா படுகோனே நடித்துள்ள பிரமாண்ட சயின்ஸ் பிக் ஷன் படம் ‛கல்கி 2898 ஏடி'. மகாபாரதத்தை தழுவி இன்றைய காலக்கட்டத்துடன் இணைந்து இந்தபடம் எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 27ல் படம் வெளியாகும் நிலையில் மும்பையில் இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் பேசிய கமல், ‛‛ஹீரோவை விட வில்லனாக நடிக்கவே எனக்கு அதிக ஆர்வம் உள்ளது. ஹீரோயினுக்காக ஹீரோ காத்திருந்து காதல் பாட்டு எல்லாம் பாட வேண்டும். ஆனால் வில்லன் அப்படியில்லை தனக்கு பிடித்ததை செய்வான் கல்கியில் அதைத்தான் நான் மகிழ்ச்சியாக செய்திருக்கிறேன். சாதாரண மனிதர்கள் அசாதாரணமான செயல்களை செய்வார்கள். எனது குருநாதர் கே.பாலசந்தர் பார்க்க அரசு அதிகாரி போன்று இருப்பார். ஆனால் அவர் அற்புதமான படங்களை இயக்கினார். அதேப்போல் இயக்குனர் நாக் அஸ்வினும் அசாதாரணமானவர் தான், பாராட்டுக்குரியவர்'' என்றார்.