'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல், தீபிகா படுகோனே நடித்துள்ள பிரமாண்ட சயின்ஸ் பிக் ஷன் படம் ‛கல்கி 2898 ஏடி'. மகாபாரதத்தை தழுவி இன்றைய காலக்கட்டத்துடன் இணைந்து இந்தபடம் எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 27ல் படம் வெளியாகும் நிலையில் மும்பையில் இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் பேசிய கமல், ‛‛ஹீரோவை விட வில்லனாக நடிக்கவே எனக்கு அதிக ஆர்வம் உள்ளது. ஹீரோயினுக்காக ஹீரோ காத்திருந்து காதல் பாட்டு எல்லாம் பாட வேண்டும். ஆனால் வில்லன் அப்படியில்லை தனக்கு பிடித்ததை செய்வான் கல்கியில் அதைத்தான் நான் மகிழ்ச்சியாக செய்திருக்கிறேன். சாதாரண மனிதர்கள் அசாதாரணமான செயல்களை செய்வார்கள். எனது குருநாதர் கே.பாலசந்தர் பார்க்க அரசு அதிகாரி போன்று இருப்பார். ஆனால் அவர் அற்புதமான படங்களை இயக்கினார். அதேப்போல் இயக்குனர் நாக் அஸ்வினும் அசாதாரணமானவர் தான், பாராட்டுக்குரியவர்'' என்றார்.