நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

கன்னட சினிமாவில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் விஷ்ணுவர்தன். 2009ம் ஆண்டு தனது 59வது வயதில் மரணம் அடைந்தார். மத்திய அரசு அவருக்கு 2013ம் ஆண்டு தபால்தலை வெளியிட்டு கவுரவித்தது. மாநில அரசு விஷ்ணுவர்த்தனுக்கு நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்தது.
அதன்படி மைசூரு அருகே உள்ள அவரது சொந்த ஊரான ஹலாலு கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் 11 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டப்பட்டது. அவரது நினைவு தினமான நேற்று, இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். விஷ்ணுவர்தனின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான பாரதி, மகள் கீர்த்தி, மருமகன் அனிருத், மைசூர் எம்பி பிரதாப் சிங் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பொம்மை, "விஷ்ணுவர்தன் ஒரு மதிப்புமிகு நடிகர். பல மொழிகளில் நடித்துள்ள பல மொழி நடிகர். சாகச சிங்கம் என்று அழைக்கப்படுபவர் . விஷ்ணுவர்தன் நினைவிடம் சுற்றுலா தலமாக மாற வேண்டும்" என்றார்.