மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

கன்னட சினிமாவில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் விஷ்ணுவர்தன். 2009ம் ஆண்டு தனது 59வது வயதில் மரணம் அடைந்தார். மத்திய அரசு அவருக்கு 2013ம் ஆண்டு தபால்தலை வெளியிட்டு கவுரவித்தது. மாநில அரசு விஷ்ணுவர்த்தனுக்கு நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்தது.
அதன்படி மைசூரு அருகே உள்ள அவரது சொந்த ஊரான ஹலாலு கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் 11 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டப்பட்டது. அவரது நினைவு தினமான நேற்று, இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். விஷ்ணுவர்தனின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான பாரதி, மகள் கீர்த்தி, மருமகன் அனிருத், மைசூர் எம்பி பிரதாப் சிங் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பொம்மை, "விஷ்ணுவர்தன் ஒரு மதிப்புமிகு நடிகர். பல மொழிகளில் நடித்துள்ள பல மொழி நடிகர். சாகச சிங்கம் என்று அழைக்கப்படுபவர் . விஷ்ணுவர்தன் நினைவிடம் சுற்றுலா தலமாக மாற வேண்டும்" என்றார்.