மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

கடந்த 2020ல் மலையாளத்தில் அதிதி ராவ் ஹைதரி நடித்த சூபியும் சுஜாதையும் என்கிற படம் வெளியானது.. ஒரு இந்து பெண்ணுக்கும் இஸ்லாமிய இளைஞனுக்கும் மலரும் காதலை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாகவும் மிக முக்கியமான வேடத்தில் அதிதி ராவின் காதலனாக சூபி கதாபாத்திரத்தில் அறிமுக நடிகர் தேவ் மோகனும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நடித்ததை தொடர்ந்து நடிகர் தேவ் மோகன் தற்போது தெலுங்கு, தமிழில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக துஷ்யந்தன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அதிதி ராவ்வும் தேவ்மோகனும் விருது வழங்கும் விழா ஒன்றில் சந்தித்துக் கொண்டனர். “நீண்டநாளைக்கு பிறகு அதிதி ராவை சந்திப்பதில் மகிழ்ச்சி என்று இந்த சந்திப்பு குறித்து கூறியுள்ளார் தேவ் மோகன்.