‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கன்னட சினிமாவில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் விஷ்ணுவர்தன். 2009ம் ஆண்டு தனது 59வது வயதில் மரணம் அடைந்தார். மத்திய அரசு அவருக்கு 2013ம் ஆண்டு தபால்தலை வெளியிட்டு கவுரவித்தது. மாநில அரசு விஷ்ணுவர்த்தனுக்கு நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்தது.
அதன்படி மைசூரு அருகே உள்ள அவரது சொந்த ஊரான ஹலாலு கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் 11 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டப்பட்டது. அவரது நினைவு தினமான நேற்று, இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். விஷ்ணுவர்தனின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான பாரதி, மகள் கீர்த்தி, மருமகன் அனிருத், மைசூர் எம்பி பிரதாப் சிங் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பொம்மை, "விஷ்ணுவர்தன் ஒரு மதிப்புமிகு நடிகர். பல மொழிகளில் நடித்துள்ள பல மொழி நடிகர். சாகச சிங்கம் என்று அழைக்கப்படுபவர் . விஷ்ணுவர்தன் நினைவிடம் சுற்றுலா தலமாக மாற வேண்டும்" என்றார்.