'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான அதே நாளில் கன்னடத்தில் வெளியான படம் தான் காந்தாரா. சிறிய படம் என்கிற அளவில் வெளியான இந்தப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருந்தார். படம் வெளியானபின் தென்னிந்தியா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கவனம் ஈர்த்த இந்த படத்தின் வெற்றி ரிஷப் ஷெட்டியை மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளில் இருந்து அவருக்கு நடிக்க அழைப்பு வந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரிஷப் ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என கூறியுள்ளார் ரிஷப் ஷெட்டி. அதுமட்டுமல்ல அடுத்தது தான் நடிக்க இருப்பது கன்னட திரைப்படம் தான் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு காந்தாரா படத்தின் தயாரிப்பாளர், ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என கூறியிருந்தார். அதேசமயம் காந்தாரா 2 உடனடியாக துவங்கப்பட போவதில்லை என்றும் வேறு ஒரு கன்னட படத்தில் தான் ரிஷப் ஷெட்டி, நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.