பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

வாரிசு படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில் வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இயக்குனர் மிஷ்கினும் விஜய்- 67 வது படத்தில் தான் வில்லனாக நடித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் அவர் கூறுகையில், இப்போதுதான் விஜய்யின் 67வது படத்தில் அவருடன் இணைந்து நடித்துவிட்டு வருகிறேன். இதற்கு முன்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த யூத் படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அதன் பிறகு இப்போதுதான் அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளேன் என்று விஜய் 67வது படத்தில் தான் வில்லனாக நடிப்பதை உறுதிப்படுத்தினார் மிஷ்கின். அதோடு, கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவரும் இந்த விஜய் 67 வது படத்தின் 6 வில்லன்களில் ஒருவராக நடிப்பதாக இன்னொரு புதிய தகவலும் வெளியாகியிருக்கிறது.