நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் | 50 லட்சம் சம்பளத்தை விட்டு இலங்கை படத்தில் நடித்த டி.ஜே .பானு | கார்த்திக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி? | 'நடிகர்கள் உண்மை ஹீரோக்கள் அல்ல' : நடிகர் சூரி வெளிப்படை | ‛பெத்தி' ஓடிடி விற்பனை எவ்வளவு | 7 வருடங்களுக்குப் பிறகு தேவ் பட இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு! |

2014ம் ஆண்டு சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வெளியான படம் ஜிகர்தண்டா. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயரில் அவர் இயக்கி வருகிறார். இதில் நாயகனாக ராகவா லாரன்சும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது 36 நாட்களில் ஒரே ஷெட்யூலில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இது குறித்து எஸ் .ஜே .சூர்யா வெளியிட்டுள்ள ஒரு பதிவில், என்ன ஒரு கான்செப்ட். என்ன ஒரு செட். என்ன ஒரு போட்டோகிராபி. என்ன ஒரு பிரம்மாண்டம். என்ன ஒரு தயாரிப்பு வேல்யூ, அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு அளித்த கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ள எஸ் .ஜே .சூர்யா, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்த புகைப்படத்தை பதிவிட்டு, நான் பார்த்த அற்புத உள்ளம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நிமிஷா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.




