'டாக்சிக்' படத்திற்கு அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | கதைத் திருட்டு சர்ச்சையில் 'சக்தித் திருமகன்' | மோகன்லால் மகள் அறிமுகமாகும் படம்: துவக்கவிழா பூஜையுடன் ஆரம்பம் | விஷால் பாணியில் நடிகர் யஷ் ; 'டாக்ஸிக்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம் ? | கமல் மிஸ் பண்ணிய '20-20' பாடல் ; நடிகர் திலீப் புது தகவல் | ஸ்ரீலங்காவில் நடைபெறும் ராம்சரணின் 'பெத்தி' படப்பிடிப்பு | ஆங்கிலத்தில் டப்பிங் ஆகி வெளியாகும் முதல் படம் 'காந்தாரா சாப்டர் 1' | அப்பாவை இழந்தது அப்படிதான், தம் அடிக்கிற சீனில் நடிக்கமாட்டேன் : பூவையார் | 30 வயதில் திருமணம் செய்ய நினைத்தேன் : தமன்னா பேசியது ஏன் | சினிமாவிலும் 8 மணி நேர வேலை: ராஷ்மிகா வலியுறுத்தல் |

கடந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தின் போது தங்களது இரட்டை குழந்தைகளுடன் தாங்கள் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். அதேபோல் தற்போது பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில், தன்னுடைய ஒரு கையின் அரவணைப்பில் நயன்தாராவும், இன்னொரு கையில் இரண்டு குழந்தைகளையும் பிடித்திருக்கிறார். அதோடு மகாநதி படத்தில் இடம்பெற்றுள்ள பொங்கலோ பொங்கல் என்ற பாடலையும் அதில் அவர் இணைத்திருக்கிறார். அதேசமயம் வழக்கம் போல் தங்களது குழந்தைகளின் முகத்தை காண்பிக்காமல் எமோஜி வைத்து மறைத்துள்ளார்கள்.