ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
மேயாதமான் படம் மூலம் தமிழில் நாயகியாக களமிறங்கிய பிரியா பவானி சங்கர் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கிலும் கால்பதித்துள்ள இவர் ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. எதிர்காலத்தை பற்றி பெரிய திட்டங்கள் எதுவும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தேன். ரசிகர்கள் ஏற்பார்களா, இல்லையா என்று யோசிக்கவில்லை. நடித்தால் பணம் வருகிறது என நினைத்து, நடித்தேன். சினிமா பின்னணி உள்ளவர்களே சினிமாவில் தங்களை நிரூபிக்க கஷ்டப்படுகிறார்கள். அவர்களை பார்க்கும்போது நான் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என நினைக்கிறேன்'' என்றார்.