தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
யானை, சினம் படங்களை தொடர்ந்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் லண்டனில் தொடங்கியது. அதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அச்சம் என்பது இல்லையே படத்தின் சண்டைக் காட்சியில் நடித்தபோது அருண் விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள அருண் விஜய், சண்டை காட்சிகளில் நடிக்கும்போது எத்தனை முறை காயம் ஏற்பட்டாலும் அதைப்பொருட்படுத்துவதில்லை. சொந்தமாக டூப் பயன்படுத்தாமல் சண்டைக்காட்சியில் நடிப்பதையே நான் விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.