மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
யானை, சினம் படங்களை தொடர்ந்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் லண்டனில் தொடங்கியது. அதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அச்சம் என்பது இல்லையே படத்தின் சண்டைக் காட்சியில் நடித்தபோது அருண் விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள அருண் விஜய், சண்டை காட்சிகளில் நடிக்கும்போது எத்தனை முறை காயம் ஏற்பட்டாலும் அதைப்பொருட்படுத்துவதில்லை. சொந்தமாக டூப் பயன்படுத்தாமல் சண்டைக்காட்சியில் நடிப்பதையே நான் விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.