தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. அவரும் சிம்புவும் காதலித்து பின்னர் பிரிந்தனர் என்பதும் தமிழ் சினிமாவில் பிரிவில் முடிந்த ஒரு காதல் வரலாறு. ஹன்சிகாவின் தமிழ் சினிமா மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. தெலுங்கிலும் அவருக்குப் படங்கள் இல்லை.
இந்நிலையில் தனது பிசினஸ் பார்ட்னரும், தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவருமான சோஹைல் கத்துரியா என்பவரை வரும் டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் மணக்க உள்ளார். திருமணத்திற்கு முன்னதாக தனது நெருங்கிய தோழிகளுக்கு 'பேச்சுலர்' பார்ட்டி ஒன்றை வழங்கியுள்ளார் ஹன்சிகா.
அது குறித்த வீடியோவை 'என்றென்றைக்கும் மிகச் சிறந்த பேச்சுலரேட்… சிறந்தவர்களின் வாழ்த்துகளுடன்,” என்று பதிவிட்டுள்ளார். தனது திருமணத்திற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் யார் யாரை ஹன்சிகா அழைத்துள்ளார் என்பது தெரியவில்லை. அவர்களை நேரில் சந்தித்து பத்திரிகை கொடுத்து அழைத்ததாக எந்த தகவலுமில்லை. மீடியா முன்னிலையிலும் தனது திருமணம் குறித்து, மற்ற நடிகைகளைப் போல, அவர் எந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தவில்லை.