டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

தமிழில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா மொத்வானி. சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோகைல் கத்துரியா என்பவரை 2022ல் திருமணம் செய்து கொண்டார்.. இன்னொரு பக்கம் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மொத்வானிக்கும் 2020ல் முஸ்கான் நான்சி ஜேம்ஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக 2022ல் கணவரிடம் இருந்து பிரிந்து தனியே வாழ்கிறார் முஸ்கான் நான்சி ஜேம்ஸ்.
இந்த நிலையில் தனது கணவருடன் சேர்ந்து ஹன்சிகா, அவரது தாயார் ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாக கடந்த ஜனவரியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் முஸ்கான் நான்சி ஜேம்ஸ். இந்த புகாரை தொடர்ந்து கிட்டத்தட்ட நான்கு பிரிவுகளில் ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஜாமின் கிடைத்தது
அதேசமயம் இந்த வழக்கு தன் மீது வேண்டுமென்றே தொடுக்கப்பட்டிருப்பதாக கூறி இதனை தள்ளுபடி செய்ய வேண்டுமென மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் ஹன்சிகா. இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஹன்சிகாவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனை தொடர்ந்து ஹன்சிகா இந்த வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.