காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் |

கடந்த ஒரு மாத காலமாக இன்ஸ்டாகிராமில் எந்த பதிவுகளும் வெளியிடாமல் இருந்த ஹன்சிகா நேற்று மும்பையில் உள்ள தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதில், அழகாக அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை படங்கள் இடம் பெற்றுள்ளது. அதோடு எனது பாப்பாவை வீட்டிற்கு வரவேற்கிறோம். கணபதி பாப்பா மோரியா என்று ஒரு பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் ஹன்சிகாவின் கணவர் இடம்பெறவில்லை. கடந்த 2022ம் ஆண்டில் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, 2024 ஆம் ஆண்டில் தங்களது இரண்டாவது திருமண நாளை கணவருடன் கொண்டாடினார். சமீபகாலமாக அவர் கணவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், இதுவரை அதற்கு ஹன்சிகா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. விநாயகர் சதுர்த்தி விழாவையும் அவர் தனிமையில் கொண்டாடி இருப்பது அந்த செய்தியை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.