நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தமிழில் முகமூடி, பீஸ்ட் போன்ற படங்களில் நடித்தவர் மும்பை நடிகையான பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கு, ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் சல்மான்கான் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வந்தபோது படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கால் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார் பூஜா ஹெக்டே. தனது காலில் கட்டு போட்ட நிலையில் தான் வீட்டில் அமர்ந்தபடி சிகிச்சை எடுத்து வரும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், விபத்துக்கு பிறகு தான் நன்றாக தேறி வருவதாக தெரிவித்திருக்கும் பூஜா ஹெக்டே விரைவில் திரிவிக்கிரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் அவரது 28வது படத்தில் நடிப்பதற்கு தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா சமீபத்தில் இறந்ததை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் மாதம் மீண்டும் மகேஷ்பாபு 28வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். அப்போது மகேஷ் பாபுவுடன் இணைந்து பூஜா ஹெக்டேவும் நடிக்க இருக்கிறார். மேலும் இதற்கு முன்பு தெலுங்கில் மகரிஷி என்ற படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.