எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். தற்போது உதயநிதி ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ளது. திருநெல்வேலி வந்த கீர்த்தி சுரேஷ், நாங்குநேரி ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது அம்மாவும், மாஜி நடிகையுமான மேனகா சுரேஷ், பாட்டி ஆகியோரும் உடன் வந்திருந்தனர். கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு வந்த அவரை பக்தர்கள் பலரும் சூழ்ந்து கொண்டு போட்டோ எடுத்தனர்.