மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தெலுங்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய்சேதுபதி வில்லனாக நடித்த உப்பென்னா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. அந்த படத்தின் வெற்றியால் தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு தற்போது வேகமாக வளர்ந்து வருகிறார்.
தமிழில் பாலா டைரக்ஷனில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் வெங்கட்பிரபு முதன்முறையாக தமிழ், தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து இயக்கி வரும் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 40 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று வெங்கட்பிரபுவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள கீர்த்தி ஷெட்டி அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து விலாவாரியாக பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் இதுவரை பார்த்ததிலேயே எப்போதும் புன்னகை ததும்பும் முகத்துடன் அரவணைக்கும் நபராக காணப்படும் ஒருவராக இயக்குனர் வெங்கட் பிரபுவை பார்க்கிறேன். நீங்கள் இப்படி இருப்பதற்காக உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். மேலும் உங்களுடன் இந்த படத்தில் இணைந்து நான் பணியாற்றப்போவதாக செய்திகள் வெளியானதும் உங்கள் படத்தில் நடித்த பணியாற்றிய பல பேர் நிச்சயமாக இந்த படம் உங்களுக்கு ஒரு ஜாலியான அனுபவமாக இருக்கும் என்றும் உற்சாகம் கொடுக்கும் என்றும் கூறினார்கள். அதனாலேயே உங்களுடன் இணைந்து பணிபுரியும் ஆர்வம் அதிகமானது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நான் கேள்விப்பட்டதை விட, எதிர்பார்த்ததைவிட அந்த கலகலப்பு இன்னும் அதிகமாகவே இருந்ததை உணர முடிந்தது. என்னுடைய இந்த பயணத்தில் இவ்வளவு கலகலப்பான அனுபவங்களை கொடுத்ததற்காக உங்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.




