பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

தமிழ் சினிமாவில் ஒரு நடிகைக்கு கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் சென்றார்கள் என்றால் அது நடிகை குஷ்புவுக்கு மட்டும் தான். அந்த அளவிற்கு 90களில் முன்னணி நடிகையாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த குஷ்பு, பின்னர் நடிப்பிலிருந்து ஒதுங்கி சினிமாவில் தயாரிப்பு நிர்வாகத்தை மட்டும் கவனித்து வருகிறார். இன்னொரு பக்கம் தேசிய கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தையும் தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 34 வருடங்களாக தனது அறிமுகப்படமான தர்மத்தின் தலைவன் படத்திலிருந்து கடந்த வருடம் அண்ணாத்த படம் வரை தான் இணைந்து நடித்த, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ரஜினிகாந்துடன் மிக நெருக்கமான நட்பு பாராட்டி வருகிறார் குஷ்பு.
அந்தவகையில் இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்துள்ளார் குஷ்பு. இந்த சந்திப்பிற்கு வேறு எந்த நோக்கம் இல்லை என்றும் இது சூப்பர் ஸ்டாருடன் சிரித்துப்பேசி ஒரு கோப்பை தேநீர் பருகிய ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு என்று குறிப்பிட்டுள்ள குஷ்பு, ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி.. நீங்கள் இப்போதும் பிரமிக்க வைக்கிறார்கள் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.