மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது |
தமிழ் சினிமாவில் ஒரு நடிகைக்கு கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் சென்றார்கள் என்றால் அது நடிகை குஷ்புவுக்கு மட்டும் தான். அந்த அளவிற்கு 90களில் முன்னணி நடிகையாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த குஷ்பு, பின்னர் நடிப்பிலிருந்து ஒதுங்கி சினிமாவில் தயாரிப்பு நிர்வாகத்தை மட்டும் கவனித்து வருகிறார். இன்னொரு பக்கம் தேசிய கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தையும் தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 34 வருடங்களாக தனது அறிமுகப்படமான தர்மத்தின் தலைவன் படத்திலிருந்து கடந்த வருடம் அண்ணாத்த படம் வரை தான் இணைந்து நடித்த, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ரஜினிகாந்துடன் மிக நெருக்கமான நட்பு பாராட்டி வருகிறார் குஷ்பு.
அந்தவகையில் இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்துள்ளார் குஷ்பு. இந்த சந்திப்பிற்கு வேறு எந்த நோக்கம் இல்லை என்றும் இது சூப்பர் ஸ்டாருடன் சிரித்துப்பேசி ஒரு கோப்பை தேநீர் பருகிய ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு என்று குறிப்பிட்டுள்ள குஷ்பு, ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி.. நீங்கள் இப்போதும் பிரமிக்க வைக்கிறார்கள் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.