ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
சென்னை : நடிகை நயன்தாரா அம்மாவான விவகாரத்தில் விசாரணை, கிடப்பில் போடப்பட்டு உள்ளது. நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு, திருமணமான நான்கு மாதங்களில், இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டது. வாடகை தாய் வாயிலாக, அவர்கள் குழந்தை பெற்றதை, தமிழக அரசு உறுதி செய்தது.
இதுகுறித்து விசாரிக்க, மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்கக அதிகாரிகள் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
அப்போதே, எந்த மருத்துவமனை வாயிலாக, வாடகை தாய் நியமித்து குழந்தை பெற்றனர் என்பது போன்ற விபரங்களை, அதிகாரிகள் சேகரித்தனர். மேலும், வாடகை தாய் முறைக்கான சட்ட விதிகளை பின்பற்றவில்லை என்ற தகவலும் உறுதி செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில், எம்.எல்.ஏ., ஒருவரின் தலையீடு இருப்பதாக கூறப்படும் நிலையில், அதிகாரிகள் விசாரணையை கிடப்பில் போட்டுள்ளனர். விசாரணை குழுவில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவான மாவட்டங்களில், கள ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவம், ஊரக சேவை பணிகள் இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'நடிகை நயன்தாரா வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றது தொடர்பாக, எவ்வித விசாரணையும் நடக்கவில்லை; அறிக்கையும் தயாரிக்கப்படவில்லை. விசாரணை துவங்குமா என்பது தெரியாது'என்றனர்.