காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன்'.
காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி என நேற்று வரையிலான விடுமுறை நாட்களில் கடந்த பத்து நாட்களாக இப்படம் தியேட்டர்களில் நிறைவான ரசிகர்களுடன் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்தது. பத்து நாட்களில் சுமார் 390 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று வார முதல் நாளான திங்கள் கிழமையிலும் 60 சதவீதம் வரையில் தியேட்டர்கள் நிறைந்துள்ளன. இன்றைய வசூலுடன் இப்படம் 400 கோடி வசூலை உலக அளவில் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மிக விரைவாக 150 கோடி வசூல், இந்திய அளவில் ஒரு தமிழ்த் திரைப்படத்தின் 200 கோடி வசூல் என சில சாதனைகள் நடந்த நிலையில் அடுத்து உலக அளவில் ஒரு தமிழ்த் திரைப்படத்தின் விரைவான 400 கோடி வசூல் என்ற சாதனையையும் இப்படம் படைக்கப் போகிறது.