Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரியாணி சாப்பிட்டதற்காக இட்லியை தவிர்க்க முடியுமா? - ஜெயம் ரவி கேள்வி

29 ஏப், 2023 - 16:48 IST
எழுத்தின் அளவு:
Jayam-ravi-says-that-responsibility-has-increased-after-Ponniyinselvan

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது இந்த படத்தில் கதையின் நாயகனான அருண்மொழிவர்மன் கேரக்டரில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:

மணிரத்தினம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எல்லா நடிகர்களுக்குமே ஒரு கனவாக இருக்கும். அந்த கனவு எனக்கும் இருந்தது. தற்போது நான் இரண்டு படங்களில் நடித்து விட்டேன். இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சரித்திர படத்தில் டைட்டில் கேரக்டரில் நடிப்பேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இது கடவுள் கொடுத்த வரம் என்று நினைக்கிறேன்.

இவ்வளவு பெரிய படத்தில் நடித்துவிட்டு அதற்குப் பிறகு சாதாரண படங்களில் நடிப்பதற்கு சங்கடமாக இருக்குமே என்று சிலர் கேட்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. பிரியாணி சாப்பிட்டு விட்டோம் என்பதற்காக மறுநாளில் இருந்து இட்லி சாப்பிடாமல் இருக்க முடியாது. எல்லாமே உணவுதான். என்றாலும் இப்போது எனக்கு பொறுப்பு அதிகரித்து இருக்கிறது. இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் புதிய மதிப்பீட்டை கணக்கில் கொண்டு படங்களையும் கதைகளையும் தேர்வு செய்து நடிக்க வேண்டும்.

தற்போது நான் நடித்து வரும் ஒவ்வொரு படங்களுமே தனித்தனியான கதை களங்களை கொண்ட வித்தியாசமான படம். முன்பு போல் சாக்லேட் பாயாக என்னால் நடிக்க முடியும் என்று தோன்றவில்லை. அப்படி நடிச்சாலும் என் வயது, உடல் அமைப்பு இவற்றை கணக்கில் கொண்டு தான் அந்த கேரக்டரை வெளிப்படுத்தும் படியாக இருக்கும்.

நான் படம் இயக்கப் போவது உறுதி. இதற்காக பல கதைகளை தயார் செய்து வைத்திருக்கிறேன் அதில் ஒன்றை மணிரத்தினம் சாரிடம் சொல்லி அவரும் "நன்றாக இருக்கிறது செய்" என்று ஒரு வரியில் வாழ்த்தினார். அதுவே எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்.

இது குறித்து நானும் கார்த்தியும் நிறைய பேசியிருக்கிறோம். கார்த்திக்கு ஏற்ற கதை ஒன்றையும் அவரிடம் சொல்லி இருக்கிறேன். அவரும் நடிப்பதாக சொல்லி இருக்கிறார். சரியான சந்தர்ப்பம் அமையும்போது இது நடக்கும். பொன்னியின் செல்வனில் நான் கார்த்தி, விக்ரம் இணைந்து நடித்தது போன்று இனிவரும் காலங்களிலும் இணைந்து நடிப்போமா என்ற கேள்வியும் எழுகிறது. மணிரத்னம் போன்ற ஹீரோக்களை ஆளுமை செய்கிற இயக்குனர்களால் கதைகள் உருவாக்கப்பட்டால் நடிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. இணைந்து நடிக்க எல்லா நடிகர்களுமே தயாராகதான் இருக்கிறார்கள அதற்கேற்ற களத்தை இயக்குனர்கள் தான் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மகன் வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்தால் ஏற்றுக் கொள்வார்களா?: பூமிகா கேள்விமகன் வயது நடிகருடன் ரொமான்ஸ் ... 'இறுதியாக உனக்கு அமைதி கிடைத்துவிட்டது' : முன்னாள் கணவருக்கு வனிதா இரங்கல் 'இறுதியாக உனக்கு அமைதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

30 ஏப், 2023 - 12:00 Report Abuse
அப்புசாமி அருண்மொழித்தேவன் இட்லி சாபுட்டாரா? பிரியாணியா?
Rate this:
29 ஏப், 2023 - 17:41 Report Abuse
anonymous பிரியாணிய விட இட்லி தான் நல்ல உணவு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in