இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

பாலிவுட் நடிகை பூமிகா சாவ்லா. தமிழில் சில்லுனு ஒரு காதல், பத்ரி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் சல்மான் கான் நடித்து சமீபத்தில் வெளியான 'சசி கா பாய் கசி கா ஜான்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'வீரம்' படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பூமிகா சினிமாவில் ஆணாதிக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: நடிகைகளுக்கு முக்கியத்துவம் இல்லாத கமர்சியல் படங்களில் இப்போதும் நடிகர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். நடிகைகள் தொடர்ந்து பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள். வயது முதிர்ந்தாலும் நடிகர்கள் ஹீரோக்களாக தொடர்ந்து நடிக்கிறார்கள். நடிகைகள் வயதுக்கு ஏற்ற வேடங்களில் மட்டுமே நடிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த நிலையைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்தான் மாற்ற வேண்டும். இப்போது வெப் சீரிஸ்களிலும், ஓடிடியிலும் இந்த நிலை மாறிக்கொண்டிருக்கிறது.
நடிகர்கள் தங்களைவிட மிகவும் வயது குறைந்த பெண்களுடன் ஜோடியாக நடிப்பது, ரொமான்ஸ் செய்வது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. நான் என் மகன் வயதில் இருப்பவர்களிடம் ரொமான்ஸ் செய்து நடித்தால் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? ஆனால், ஆண் நடிகர்கள் அதைச் செய்தால் மட்டும் ஏற்றுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்.
சினிமாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஆண்கள் தங்களைவிடவும் மிகவும் வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்தால் ஏற்றுக் கொள்கிறார்கள். அதையே பெண் செய்தால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். என்று பேசியுள்ளார்.