சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலரது நடிப்பில் வெளியான சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படம் 500 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. இப்படத்தில் நடித்தவர்களுக்கு இப்படம் நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கும் கூட ரசிகர்களின் பாராட்டுக்கள் கிடைத்தது.
இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பு நடத்திய போதே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பையும் சேர்த்து முடித்துவிட்டார்கள். முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இரண்டாம் பாகத்தில் சில புதிய காட்சிகளைப் படமாக்க மணிரத்னம் திட்டமிட்டாராம்.
படத்தின் மையக் கதாபாத்திரமான வந்தியத் தேவன் கதாபாத்திரத்திற்குக் கூடுதலாகக் காட்சிகளைச் சேர்க்க முடிவு செய்து அக்கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தியை மீண்டும் படப்பிடிப்புக்கு அழைத்தாராம். ஆனால், அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒத்துக் கொண்டதால் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க மீண்டும் நீளமான முடியை வளர்க்க முடியாது என கார்த்தி மறுத்துவிட்டதாக ஒரு தகவல்.
சரி, விக்ரம், ஜெயம் ரவி கதாபாத்திரங்களை கொஞ்சம் நீட்டித்து படமாக்கலாம் என அவர்களிடம் பேசிய போதும் அவர்களும் கார்த்தி சொன்ன அதே காரணத்தை சொல்லி ஒதுங்கியிருக்கிறார்கள். எனவே, கதாநாயகர்களை விட்டுவிட்டு ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க தற்போது முடிவு செய்து அவரிடமும் பேசிவிட்டதாகச் சொல்கிறார்கள். இதற்காக படக்குழு விரைவில் மும்பை சென்று அங்கேயே காட்சிகளைப் படமாக்கப் போகிறார்களாம். எனவே இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யாவின் நந்தினி கதாபாத்திரத்திற்குக் கூடுதல் காட்சிகள் வரலாம்.