'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலரது நடிப்பில் வெளியான சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படம் 500 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. இப்படத்தில் நடித்தவர்களுக்கு இப்படம் நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கும் கூட ரசிகர்களின் பாராட்டுக்கள் கிடைத்தது.
இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பு நடத்திய போதே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பையும் சேர்த்து முடித்துவிட்டார்கள். முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இரண்டாம் பாகத்தில் சில புதிய காட்சிகளைப் படமாக்க மணிரத்னம் திட்டமிட்டாராம்.
படத்தின் மையக் கதாபாத்திரமான வந்தியத் தேவன் கதாபாத்திரத்திற்குக் கூடுதலாகக் காட்சிகளைச் சேர்க்க முடிவு செய்து அக்கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தியை மீண்டும் படப்பிடிப்புக்கு அழைத்தாராம். ஆனால், அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒத்துக் கொண்டதால் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க மீண்டும் நீளமான முடியை வளர்க்க முடியாது என கார்த்தி மறுத்துவிட்டதாக ஒரு தகவல்.
சரி, விக்ரம், ஜெயம் ரவி கதாபாத்திரங்களை கொஞ்சம் நீட்டித்து படமாக்கலாம் என அவர்களிடம் பேசிய போதும் அவர்களும் கார்த்தி சொன்ன அதே காரணத்தை சொல்லி ஒதுங்கியிருக்கிறார்கள். எனவே, கதாநாயகர்களை விட்டுவிட்டு ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க தற்போது முடிவு செய்து அவரிடமும் பேசிவிட்டதாகச் சொல்கிறார்கள். இதற்காக படக்குழு விரைவில் மும்பை சென்று அங்கேயே காட்சிகளைப் படமாக்கப் போகிறார்களாம். எனவே இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யாவின் நந்தினி கதாபாத்திரத்திற்குக் கூடுதல் காட்சிகள் வரலாம்.